சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil

கள்ள தொடர்பினால் பலியான உயிர்..!(Santhosh Murdered Manjula)
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சேர்ந்த மஞ்சுளா மற்றும் அதே மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த சந்தோஷ் ஆகியோர் நட்பாக பழகி வந்துள்ளனர். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சென்னையில் இருவரும் பணியாற்றி வந்தபோது மீண்டும் சந்திப்பு ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது.
பின்னர் இருவரும் ஒரே வீட்டில் தங்க முடிவு செய்து சென்னை சிந்தாதிரிப்பேட்டை உள்ள ஒரு சிறிய வீட்டில் மாதம் 3 ஆயிரம் ரூபாய் வாடகையில் குடியேறி உள்ளனர். வீட்டின் உரிமையாளரின் சந்தேகத்தை போக்கும் வகையில் அவரிடம் அக்கா தம்பி எனக்கூறினர். தங்களது வீட்டில் வறுமை என்பதால் சென்னைக்கு வேலை தேடி வந்ததாகவும் கூறி உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று காலை காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட சந்தோஷ் வீட்டில் ஒன்றாக வசித்து வந்த மஞ்சுளா என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளனர். மேலும் வழக்கறிஞர் மூலம் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். இதனைக் கேட்டு சந்தோஷ் வீட்டிற்கு சென்ற போலீசார் கதவை திறந்து பார்த்தபோது இளம்பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடப்பது தெரியவந்தது. இதனை சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்த சிந்தாதிரிப்பேட்டை காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக பெண்ணின் உடலை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் மஞ்சுளாவை சந்தோஷ் கொலை செய்துவிட்டு மின் விசிறியில் தூக்கு மாட்டி கொண்டதாக நாடகமாடியது தெரியவந்தது.
சிந்தாதிரிப்பேட்டையில் வீடு வாடகைக்கு எடுத்த பின்னர் மஞ்சுளா கோயம்பேட்டில் உள்ள தனியார் கால்செண்டரில் பணிபுரிந்து வந்ததும். சந்தோஷ் வீட்டுக்கு அருகில் உள்ள கம்பெனியில் பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது . இந்த நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான சந்தோஷ் தினந்தோறும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்ததால் இருவருக்குமிடையே சண்டை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த மஞ்சுளா. இதனால் பெங்களூரில் பணிபுரியும் முன்னாள் காதலனிடம் நடந்தது பற்றி கூறி கண்ணீர் விட்டுள்ளார் இதனை அடுத்து பெங்களூர் வருமாறு மஞ்சுளாவை முன்னாள் காதலன் அழைத்ததாக கூறப்படுகிறது . இந்த நிலையில் முன்னாள் காதலனிடம் அடிக்கடி செல்போனில் பேசுவதை சந்தோஷ் கண்டித்து உள்ளார். பின்னர் குடித்துவிட்டு தினமும் அவரை தாக்கி வந்துள்ளதாக கூறப்படுகிறது மேலும் கடந்த சில தினங்களாக வீட்டு செலவுக்கு சந்தோஷ் பணம் கொடுக்காமல் இருந்து வந்ததும். அதனால் மஞ்சுளா கடந்த 2 தினங்களாக சமைக்காமல் இருந்து வந்ததும் தெரியவந்தது. சம்பவத்தன்று மாலையில் பணி முடித்து வீட்டுக்கு குடிபோதையில் வந்த சந்தோஷ் வீட்டில் மஞ்சுளா சாப்பாடு செய்யாததால் ஆத்திரமடைந்த சண்டை போட்டதாக கூறப்படுகிறது.
அப்போது சண்டை முத்திய நிலையில் மஞ்சுளாவின் கழுத்தை கைகளால் இறுக்கி கொலை செய்த சந்தோஷ், பின்னர் அவரை துப்பட்டாவால் மின்விசிறியில் மாட்டி தொங்க விட்டது விசாரணையில் தெரியவந்தது இதனையடுத்து சந்தோசை கைது செய்த சிந்தாதிரிப்பேட்டை போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.